என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சண்டிகர் வீராங்கனை சாதனை
Byமாலை மலர்25 Feb 2020 11:49 AM GMT (Updated: 25 Feb 2020 11:49 AM GMT)
19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில் அருணாச்சல பிரதேசம் அணிக்கெதிராக சண்டிகர் வீராங்கனை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
பெண்களுக்கான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சண்டிகர் - அருணாச்சல பிரதேசம் அணிகள் கடப்பாவில் நடைபெற்ற ஆட்டத்தில் மோதின.
முதலில் பேட்டிங் செய்த சண்டிகர் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்தது. பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அருணாச்சல பிரதேசம் அணி களம் இறங்கியது. சண்டிகர் அணியின் காஷ்வீ கவுதம் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அருணாச்சல பிரதேசம் 25 ரன்னில் சுருண்டது.
இதில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த காஷ்வீ கவுதம் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனைப் படைத்தார். ஆட்டத்தின் முதல் ஓவரை காஷ்வீ வீசினார். இந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடுத்த ஓவரில் மூன்று விக்கெட்டுகளையும், அதற்கு அடுத்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதனால் அருணாச்சல பிரதேசம் 10 ரன்களை எட்டுவதற்குள் ஏழு விக்கெட்டுக்களை இழந்தது. அடுத்த ஓவரில் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆல்அவுட் ஆக்கினார். அருணாச்சல பிரதேசம் அணி 9 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. 8 வீராங்கனைகள் டக்அவுட் ஆனார்கள். அதில் நான் பேர் முதல் பந்திலேயே வெளியேறினர்.
முதலில் பேட்டிங் செய்த சண்டிகர் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்தது. பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அருணாச்சல பிரதேசம் அணி களம் இறங்கியது. சண்டிகர் அணியின் காஷ்வீ கவுதம் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அருணாச்சல பிரதேசம் 25 ரன்னில் சுருண்டது.
இதில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த காஷ்வீ கவுதம் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனைப் படைத்தார். ஆட்டத்தின் முதல் ஓவரை காஷ்வீ வீசினார். இந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடுத்த ஓவரில் மூன்று விக்கெட்டுகளையும், அதற்கு அடுத்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதனால் அருணாச்சல பிரதேசம் 10 ரன்களை எட்டுவதற்குள் ஏழு விக்கெட்டுக்களை இழந்தது. அடுத்த ஓவரில் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆல்அவுட் ஆக்கினார். அருணாச்சல பிரதேசம் அணி 9 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. 8 வீராங்கனைகள் டக்அவுட் ஆனார்கள். அதில் நான் பேர் முதல் பந்திலேயே வெளியேறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X