என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
222 ரன்கள் அடித்தும் தென்ஆப்பிரிக்காவுக்கு ஏமாற்றம்: சேஸிங் செய்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
Byமாலை மலர்16 Feb 2020 5:08 PM GMT (Updated: 16 Feb 2020 5:08 PM GMT)
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 223 ரன்கள் இலக்கை எட்டி இங்கிலாந்து வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று செஞ்சூரியனில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது.
தென்ஆப்பிரிக்கா அணியின் பவுமா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 7.4 ஓவரில் 84 ரன்கள் எடுத்திருக்கும்போது டி காக் 24 பந்தில் 35 ரன்கள் சேர்த்தார். பவுமா 24 பந்தில் 49 ரன்கள் சேர்த்தார்.
அதன்பின் வந்த கிளாசன் 33 பந்தில் 66 ரன்களும், டேவிட் மில்லர் 20 பந்தில் 35 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது.
பின்னர் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜேசன் ராய் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து பட்லர் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. பட்லர் 29 பந்தில் 57 ரன்களும், பேர்ஸ்டோவ் 34 பந்தில் 64 ரன்களும் குவித்தனர்.
கேப்டன் இயன் மோர்கன் ஆட்டமிழக்காமல் 22 பந்தில் 7 சிக்சர்களுடன் 57 ரன்கள் விளாச இங்கிலாந்து 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து 2-1 எனக் கைப்பற்றியது.
தென்ஆப்பிரிக்கா அணியின் பவுமா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 7.4 ஓவரில் 84 ரன்கள் எடுத்திருக்கும்போது டி காக் 24 பந்தில் 35 ரன்கள் சேர்த்தார். பவுமா 24 பந்தில் 49 ரன்கள் சேர்த்தார்.
அதன்பின் வந்த கிளாசன் 33 பந்தில் 66 ரன்களும், டேவிட் மில்லர் 20 பந்தில் 35 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது.
பின்னர் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜேசன் ராய் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து பட்லர் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. பட்லர் 29 பந்தில் 57 ரன்களும், பேர்ஸ்டோவ் 34 பந்தில் 64 ரன்களும் குவித்தனர்.
கேப்டன் இயன் மோர்கன் ஆட்டமிழக்காமல் 22 பந்தில் 7 சிக்சர்களுடன் 57 ரன்கள் விளாச இங்கிலாந்து 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து 2-1 எனக் கைப்பற்றியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X