search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் குணேஸ்வரன்
    X
    முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் குணேஸ்வரன்

    மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் குணேஸ்வரன் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

    மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் யான்னிக் மாடெனை இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் நேர்செட்டில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    புனே:

    3-வது மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 122-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ஜெர்மனி வீரர் யான்னிக் மாடெனை சந்தித்தார்.

    பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் குணேஸ்வரன் 7-6 (7-4), 7-6 (7-5) என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் அர்ஜூன் காதே 2-6, 4-6 என்ற நேர்செட்டில் செக்குடியரசு வீரர் ஜிரி வெஸ்லியிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் லியாண்டர் பெயஸ் (இந்தியா)-மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) இணை 6-2, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் திவிஜ் சரண் (இந்தியா)-அர்டெம் யூரிவிச் சிடாக் (நியூசிலாந்து) ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

    Next Story
    ×