search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுமித் நாகல் - ராம்குமார்
    X
    சுமித் நாகல் - ராம்குமார்

    மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ்- இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வி

    புனேயில் நடைபெற்ற மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல், செர்பியா வீரர் விக்டர் டிரோக்கியிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.
    புனே:

    3-வது மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் போட்டி புனேயில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 125-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சுமித் நாகல், முன்பு 12-வது இடம் வகித்த செர்பியா வீரர் விக்டர் டிரோக்கியை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சுமித் நாகல் 2-6, 7-6 (7-4), 1-6 என்ற செட் கணக்கில் விக்டர் டிரோக்கியிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் செட்ரிக் மார்செல் செபி 6-3, 6-4 என்ற நேர்செட்டில் கடந்த ஆண்டு 2-வது இடம் பிடித்த குரோஷியா வீரர் இவோ கார்லோவிச்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் ஜப்பான் வீரர் யூசி சுஜிதா 6-3, 6-0 என்ற நேர்செட்டில் இத்தாலியின் தாமஸ் பாபியனோவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார் 6-3, 4-6, 5-7 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் சால்வட்டோர் காருசோவிடம் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.

    Next Story
    ×