என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐஎஸ்எல் கால்பந்து - ஒடிசாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி முதலிடம் பெற்றது கோவா
Byமாலை மலர்29 Jan 2020 4:53 PM GMT (Updated: 29 Jan 2020 4:53 PM GMT)
புவனேஸ்வரத்தில் நடந்த ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஒடிசாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி மீண்டும் முதலிடத்தை பிடித்தது கோவா அணி.
புவனேஸ்வர்:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் எப்சி கோவா மற்றும் ஒடிசா எப்சி அணிகள் மோதின.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே கோவா அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். அந்த அணியின் ஜாக்கிசந்த் சிங் அபாரமாக ஆடி 2 கோல்கள் அடித்து அசத்தினார். மேலும் அந்த அணியின் வினித் ராய், பெரோனஸ் கம்மினஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஒடிசா அணி சார்பில் 2 கோல் அடித்தனர்.
இறுதியில், கோவா அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தியது. இதன்மூலம் கோவா அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் கோவா அணி தான் ஆடிய 15 போட்டிகளில் 9ல் வெற்றி பெற்று 30 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. ஒடிசா 21 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X