என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்ஆப்பிரிக்காவுக்கு ஏழு போட்டிகளில் கிடைத்தது 30 புள்ளிகள்: இதில் 6 புள்ளி பறிப்பு
Byமாலை மலர்28 Jan 2020 12:31 PM GMT (Updated: 28 Jan 2020 12:31 PM GMT)
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் மெதுவாக பந்து வீசியதால் தென்ஆப்பிரிக்காவுக்கு அபராதத்துடன் 6 புள்ளிகள் பறிக்கப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அறிமுகம் செய்துள்ளது. இதன்கீழ் முன்னணி அணிகள் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. 2019 முதல் 2021 வரை விளையாடும் போட்டிகளை கணக்கில் கொண்டு முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா 1-3 என படுதோல்வியடைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றாலும் மற்ற போட்டிகளில் எந்தவித போட்டியும் இன்றி தோல்வியை ஒப்புக்கொண்டது.
ஜோகன்னஸ்பர்க்கில் நேற்றுடன் முடிவடைந்த கடைசி போட்டியில் தென்ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மூன்று ஓவர்கள் குறைவாக வீசியது. ஐசிசி விதிப்படி ஒரு ஓவருக்கு தென்ஆப்பிரிக்கா வீரர்களுக்கு தலா 20 சதவீதம் சம்பளத்தில் இருந்து அபராதமாக பிடித்தம் செய்யப்படும். அதன்படி ஒவ்வொரு வீரர்களுக்கும் 60 சதவீதம் அபராதமாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிகளில் ஆறு குறைக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்கா இதுவரை 7 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று 30 புள்ளிகள் பெற்றிருந்தது. தற்போது 6 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதால் 24 புள்ளிகள் பெற்றுள்ளது.
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா 1-3 என படுதோல்வியடைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றாலும் மற்ற போட்டிகளில் எந்தவித போட்டியும் இன்றி தோல்வியை ஒப்புக்கொண்டது.
ஜோகன்னஸ்பர்க்கில் நேற்றுடன் முடிவடைந்த கடைசி போட்டியில் தென்ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மூன்று ஓவர்கள் குறைவாக வீசியது. ஐசிசி விதிப்படி ஒரு ஓவருக்கு தென்ஆப்பிரிக்கா வீரர்களுக்கு தலா 20 சதவீதம் சம்பளத்தில் இருந்து அபராதமாக பிடித்தம் செய்யப்படும். அதன்படி ஒவ்வொரு வீரர்களுக்கும் 60 சதவீதம் அபராதமாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிகளில் ஆறு குறைக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்கா இதுவரை 7 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று 30 புள்ளிகள் பெற்றிருந்தது. தற்போது 6 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதால் 24 புள்ளிகள் பெற்றுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X