என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இரண்டு நாட்கள் உள்ள நிலையில் 466 ரன்களை தென்ஆப்பிரிக்கா எட்டிப்பிடித்து சாதனை படைக்குமா?
Byமாலை மலர்27 Jan 2020 8:37 AM GMT (Updated: 27 Jan 2020 8:37 AM GMT)
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் 466 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்கிறது.
இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 400 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 88 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் 76 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் 5 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ்வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அடுத்து தென்ஆப்பிரிக்காவுக்கு பாலோ-ஆன் வழங்காத இங்கிலாந்து 217 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடியது. கேப்டன் ஜோ ரூட் (58 ரன்), டாம் சிப்லி (44 ரன்), சாம் கர்ரன் (35 ரன்), பென் ஸ்டோக்ஸ் (28 ரன்) தவிர மற்றவர்கள் குறைந்த ரன்னில் வீழ்ந்தனர்.
இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 61.3 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தென்ஆப்பிரிக்க அறிமுக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் பீரன் ஹென்ரிக்ஸ் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணிக்கு 466 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் எட்டிப்பிடிக்காத இலக்கை நோக்கி அந்த அணி இன்று 4-வது நாளில் விளையாட உள்ளது. இந்த மைதானத்தில் 310 ரன்களுக்கு மேலான இலக்கை யாரும் விரட்டிப்பிடித்ததில்லை என்பது நினைவு கூரத்தக்கது.
தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து அணிக்கே, இந்த டெஸ்டில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் 76 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் 5 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ்வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அடுத்து தென்ஆப்பிரிக்காவுக்கு பாலோ-ஆன் வழங்காத இங்கிலாந்து 217 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடியது. கேப்டன் ஜோ ரூட் (58 ரன்), டாம் சிப்லி (44 ரன்), சாம் கர்ரன் (35 ரன்), பென் ஸ்டோக்ஸ் (28 ரன்) தவிர மற்றவர்கள் குறைந்த ரன்னில் வீழ்ந்தனர்.
இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 61.3 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தென்ஆப்பிரிக்க அறிமுக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் பீரன் ஹென்ரிக்ஸ் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணிக்கு 466 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் எட்டிப்பிடிக்காத இலக்கை நோக்கி அந்த அணி இன்று 4-வது நாளில் விளையாட உள்ளது. இந்த மைதானத்தில் 310 ரன்களுக்கு மேலான இலக்கை யாரும் விரட்டிப்பிடித்ததில்லை என்பது நினைவு கூரத்தக்கது.
தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து அணிக்கே, இந்த டெஸ்டில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X