search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோல் அடிக்கும் முயற்சியில் இரு அணி வீரர்கள்
    X
    கோல் அடிக்கும் முயற்சியில் இரு அணி வீரர்கள்

    ஐஎஸ்எல் கால்பந்து - மும்பை, ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது

    ஐதராபாத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணியுடனான ஆட்டத்தில் 1-1 என்ற கணக்கில் ஐதராபாத் அணி சமன் செய்தது.
    ஐதராபாத்:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    ஐதராபாத் நகரில் உள்ள பாலயோகி அதெலடிக் மைதானத்தில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி, மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் மும்பை அணியின் மொகமது லர்பி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் முதல் பாதி முடிவில் மும்பை அணி 1-0 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முமபை அணியின் வெற்றி உறுதி என அந்த அணியின் வீரர்கள் நினைத்தனர்.

    ஆனால், கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் 93வது நிமிடத்தில் ஐதராபாத் அணியின் மார்கோ ஸ்டான்கோவிக் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார்.

    இறுதியில், ஐதராபாத், மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

    இதன்மூலம் மும்பை அணி 20  புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. ஐதராபாத் அணி 10 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
    Next Story
    ×