search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோல்கள் அடித்த மகிழ்ச்சியில் அரிடேன் சண்டானா
    X
    கோல்கள் அடித்த மகிழ்ச்சியில் அரிடேன் சண்டானா

    ஐஎஸ்எல் கால்பந்து: அரிடேன் சண்டானா அபாரம் - ஐதராபாத்தை 2-0 என வீழ்த்தியது ஒடிசா

    தெலுங்கானாவின் ஐதராபாத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஐதராபாத் அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது ஒடிசா.
    ஐதராபாத்:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி மற்றும் ஐதராபாத் எப்.சி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் ஐதராபாத் அணி வீரர் மார்ல்சிலினோ பெரைரா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஒடிசா அணியின் அரிடேன் சண்டானா 15வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார்.

    அதன்பின் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. நான்காவது நிமிடத்தில் ஒடிசாவின் அரிடேன் சண்டானா மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

    இதனால் ஒடிசா அணி முதல் பாதி முடிவில் 2-1 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், ஒடிசா அணி 2-1 என்ற கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    இதன்மூலம், ஒடிசா அணி தான் ஆடிய 13 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வி மற்றும் 3 ஆட்டங்களில் டிரா செய்து 21 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

    ஐதராபாத் அணி தான் ஆடிய 13 ஆட்டங்களில் 10ல் தோல்வி அடைந்து 5 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
    Next Story
    ×