search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோல் அடித்த மகிழ்ச்சியில் ஒடிசா வீரர்கள்
    X
    கோல் அடித்த மகிழ்ச்சியில் ஒடிசா வீரர்கள்

    ஐஎஸ்எல் கால்பந்து - மும்பையை 2-0 என வீழ்த்தியது ஒடிசா

    ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது ஒடிசா.
    புவனேஸ்வர்:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி மற்றும் மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயன்றனர். ஆனால் எந்த அணியினரும் கோல் போடவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் 0-0 என சமனிலையில் இருந்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஒடிசா அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் அரிடேன் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து, மற்றொரு வீரர் சிஸ்கோ 74-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

    இறுதியில், ஒடிசா அணி 2-0 என்ற கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    இதன்மூலம், ஒடிசா அணி தான் ஆடிய 12 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வி மற்றும் 3 ஆட்டங்களில் டிரா செய்து 18 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

    மும்பை அணி தான் ஆடிய 12 ஆட்டங்களில் 4 வெற்றி, 4 தோல்வி மற்றும் 4 ஆட்டங்களில் டிரா செய்து 16 புள்ளிகளை பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளது.
    Next Story
    ×