என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜேம்ஸ் ஆண்டர்சன் அபாரம்: கேப் டவுன் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 223 ரன்னில் சுருண்டது
Byமாலை மலர்5 Jan 2020 9:36 AM GMT (Updated: 5 Jan 2020 9:36 AM GMT)
கேப் டவுன் டெஸ்டில் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 223 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 269 ரன்கள் சேர்த்தது. ஒல்லி போப் மட்டும் தாக்குப்பிடித்து ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் அடித்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 3 விக்கெட்டும் பிலாண்டர், பிரிட்டோரியஸ், நார்ட்ஜ்தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது, தொடக்க வீரர் டீன் எல்கர் ஒரு பக்கம் நிலைத்து நின்று விளையாடினாலும் மறுபக்கத்தில் விக்கெட்டுக்கள் மளமளவென வீழ்ந்ததால் தென்ஆப்பிரிக்கா திணறியது. டீன் எல்கர் 88 ரன்கள் அடித்தார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் வான் டர் துஸ்சன் 68 ரன்கள் அடித்தார்.
இருவரின் அரைசதத்தால் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்திருந்தது. பிலாண்டர் 13 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆண்டர்சன் ரபாடா, நார்ஜ் ஆகியோரை வீழ்த்த தென்ஆப்பிரிக்கா 223 ரன்னில் சுருண்டது. பிலாண்டர் 17 ரன்கள் எடுத்து கடைசி வரை நின்றார்.
இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன் சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஸ்டூவர்ட் பிராட், சாம் கர்ரன் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர். இங்கிலாந்து 46 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது, தொடக்க வீரர் டீன் எல்கர் ஒரு பக்கம் நிலைத்து நின்று விளையாடினாலும் மறுபக்கத்தில் விக்கெட்டுக்கள் மளமளவென வீழ்ந்ததால் தென்ஆப்பிரிக்கா திணறியது. டீன் எல்கர் 88 ரன்கள் அடித்தார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் வான் டர் துஸ்சன் 68 ரன்கள் அடித்தார்.
இருவரின் அரைசதத்தால் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்திருந்தது. பிலாண்டர் 13 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆண்டர்சன் ரபாடா, நார்ஜ் ஆகியோரை வீழ்த்த தென்ஆப்பிரிக்கா 223 ரன்னில் சுருண்டது. பிலாண்டர் 17 ரன்கள் எடுத்து கடைசி வரை நின்றார்.
இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன் சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஸ்டூவர்ட் பிராட், சாம் கர்ரன் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர். இங்கிலாந்து 46 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X