என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுஷில் குமார்
    X
    சுஷில் குமார்

    காயம் குணமடையாததால் போட்டியை தள்ளி வைக்க வேண்டும்: சுஷில் குமார் வேண்டுகோள்

    இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரரான சுஷில் குமார் ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கான போட்டியை ஒத்தி வைக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் சுஷில் குமார். இவர், தோள்பட்டை காயத்தில் இருந்து இன்னும் முழுவதுமாக குணமடையவில்லை. இதனால் ஒலிம்பிக் தகுதி தொடருக்கான சோதனைப் போட்டியில் கலந்து கொள்ள முடியாது. போட்டியை ஒத்தி வைக்க வேண்டும் என மருத்துவ சான்றிதழ் உடன் இந்திய மல்யுத்த பெடரேசனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மார்ச் மாதம் ஆசிய சாம்பியன்ஷிப், ஒலிம்பிக் தொடருக்கான தகதிச் சுற்று தொடர் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்கு இந்தியாவில் நடைபெறும்  போட்டியில் கலந்து கொண்டு தகுதியை நிரூபிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுஷில் குமார் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×