search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரண் ரிஜிஜு
    X
    கிரண் ரிஜிஜு

    தெற்காசிய போட்டிகளில் தங்கம் வென்றவர்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பரிசு: கிரண் ரிஜிஜு

    தெற்காசிய போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
    நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினத்தோடு முடிவடைந்தது. இதில் 174 தங்க பதக்கத்துடன் இந்தியா 312 பதக்கங்கள் வென்று 13-வது முறையாக முதல் இடத்தை பிடித்தது.

    இந்நிலையில் 174 தங்கப்பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.

    அத்துடன் வெள்ளிப் பதக்கம் வென்ற 93 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், வெண்கல பதக்கம் வென்ற 45 பேருக்கு தலா ஐம்பதாயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×