search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் ஏலம்
    X
    ஐபிஎல் ஏலம்

    கொல்கத்தாவில் அடுத்த மாதம் 19-ந்தேதி ஐபிஎல் வீரர்கள் ஏலம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    ஐபிஎல் வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி கொல்கத்தாவில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் நடத்தப்படுகிறது. ஏப்ரல், மே மாதங்களில் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 8 அணிகளும் சில வீரர்களை வெளியேற்றும். சில வீரர்களை அடுத்த அணியில் இருந்து வாங்கும்.

    மேலும், டிசம்பர் மாதம் நடைபெறும் ஏலம் மூலம் எடுக்கப்படுவார்கள். அதன்படி அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறும் என இந்த தொடருக்கான ஆட்சி மன்ற குழு இன்று முடிவு செய்தது.

    ‘‘ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் டிசம்பர் 19-ந்தேதி நடக்க இருக்கிறது. இந்த ஏலம் பாரம்பரியமான  பெங்களூருவில் இருந்து இந்த முறை கொல்கத்தாவுக்கு செல்கிறது’’ என்று அந்தக்குழு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×