search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோகாவில் நடைபெற்ற நடை பந்தயத்தில் வீராங்கனை மயங்கி சரிந்த காட்சி
    X
    தோகாவில் நடைபெற்ற நடை பந்தயத்தில் வீராங்கனை மயங்கி சரிந்த காட்சி

    டோக்கியோ ஒலிம்பிக்: மாரத்தான், நடை பந்தயங்களை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு

    ஜப்பானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் மாரத்தான், நடை பந்தயங்களை வேறு இடத்திற்கு மாற்ற ஐஓஏ பரிசீலனை செய்து வருகிறது.
    உலகின் மிகப்பெரிய போட்டியாக கருதப்படுவது ஒலிம்பிக். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த போட்டி அடுத்த வருடம் ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் நடக்கிறது. போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜப்பான் செய்து வருகிறது.

    ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 24-ந்தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி வரை நடக்கிறது. இந்த வருடம் ஜூலை மாதம் 29-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 4-ந்தேதி வரை ஜப்பானில் கடும் வெப்பம் காரணமாக 57 பேரி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    இதனால் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் காலத்தில் வெப்பத்தின் தாக்கல் கடுமையாக இருக்கும் என கருதப்படுகிறது. 30 டிகிரி பாரன்ஹிட்டிற்கு மேல் வெப்பம் இருக்கும் என்பதால் மாரத்தான், நடைபயணம் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

    சமீபத்தில் தோஹாவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மாரத்தான் மற்றும் நடைபயணம் (Race Walking) போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனைகளில் பாதிபேர் முழுமையான தூரத்தை கடக்க முடியவில்லை. அவர்கள் மயங்கி சரிந்தனர்.

    இதேபோல் ஒலிம்பிக் தொடரிலும் நடந்த விடக்கூடாது என ஒருங்கிணைப்பாளர்கள் கவலைப்படுகிறார்கள். இதனால் மாரத்தான் மற்றும் நடை பயணம் ஆகிய பந்தயங்களை டோக்கியோவில் இருந்து 800 கி.மீட்டர் தொலைவில் உள்ள சப்போரோ நகருக்கு மாற்ற பரிசீலனை நடைபெற்று வருகிறது.

    சப்போரோவில் 1972-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெற்றது. டோக்கியோவை விட நான்கு அல்லது ஐந்து டிகிரி வெப்பம் குறைவாக இருக்கும்.
    Next Story
    ×