என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
17 பவுண்டரி, 12 சிக்சருடன் இரட்டை சதம்: மும்பையின் 17 வயது இளம் வீரர் சாதனை
Byமாலை மலர்16 Oct 2019 9:30 AM GMT (Updated: 16 Oct 2019 9:30 AM GMT)
விஜய் ஹசாரே டிராபியில் மும்பை அணிக்காக விளையாடி வரும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
விஜய் ஹசாரே டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூருவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் மும்பை - ஜார்க்கண்ட் அணிகள் விளையாடி வருகின்றன. மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரராக களம் இறங்கிய மும்பை அணியின் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
17 வயது ஆகும் (17 வருடம் 292 நாட்களே) ஜெய்ஸ்வால் 154 பந்தில் 203 ரன்கள் குவித்தார். இதில் 17 பவுண்டரிகள், 12 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் ‘லிஸ்ட் ஏ’ (50 ஓவர் கிரிக்கெட்) போட்டியில் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சில நாட்களுக்கு முன்புதான் கேரளா அணியின் சஞ்சு சாம்சன் இரட்டை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த விஜய் ஹசாரே டிராபியில்தான் அறிமுகம் ஆனார். இவர் ஐந்து போட்டிகளில் மூன்று சதங்கள் மூலம் 504 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
17 வயது ஆகும் (17 வருடம் 292 நாட்களே) ஜெய்ஸ்வால் 154 பந்தில் 203 ரன்கள் குவித்தார். இதில் 17 பவுண்டரிகள், 12 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் ‘லிஸ்ட் ஏ’ (50 ஓவர் கிரிக்கெட்) போட்டியில் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சில நாட்களுக்கு முன்புதான் கேரளா அணியின் சஞ்சு சாம்சன் இரட்டை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த விஜய் ஹசாரே டிராபியில்தான் அறிமுகம் ஆனார். இவர் ஐந்து போட்டிகளில் மூன்று சதங்கள் மூலம் 504 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X