என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை - விசாரணை கமிட்டி அறிக்கையில் தகவல்
Byமாலை மலர்4 Oct 2019 4:21 AM GMT (Updated: 4 Oct 2019 4:21 AM GMT)
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று விசாரணை கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடந்தது. இதில் சில முதல் தர கிரிக்கெட் வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபட வைக்க சந்தேகப்படும் நபர்கள் அணுகியதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு புகார் தெரிவித்து இருந்தது. இந்த சர்ச்சை குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நியமித்த 3 பேர் கொண்ட கமிட்டி விசாரணை நடத்தியது.
இந்த விசாரணை கமிட்டி தனது அறிக்கையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் தாக்கல் செய்து இருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘டி.என்.பி.எல். சர்ச்சை குறித்து விசாரணை கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையை நாங்கள் முழுமையாக படித்து பார்த்தோம். அதில் நடவடிக்கை எடுக்கக்கூடிய அளவுக்கு எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம். அந்த கமிட்டி டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நேர்மையான முறையில் நடைபெற்று வருவதை நிலைநிறுத்தவும், நம்பகத்தன்மையை காக்கவும் சில பரிந்துரைகளை செய்து இருக்கிறது. அதனை நாங்கள் பின்பற்றுவோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடந்தது. இதில் சில முதல் தர கிரிக்கெட் வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபட வைக்க சந்தேகப்படும் நபர்கள் அணுகியதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு புகார் தெரிவித்து இருந்தது. இந்த சர்ச்சை குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நியமித்த 3 பேர் கொண்ட கமிட்டி விசாரணை நடத்தியது.
இந்த விசாரணை கமிட்டி தனது அறிக்கையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் தாக்கல் செய்து இருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘டி.என்.பி.எல். சர்ச்சை குறித்து விசாரணை கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையை நாங்கள் முழுமையாக படித்து பார்த்தோம். அதில் நடவடிக்கை எடுக்கக்கூடிய அளவுக்கு எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம். அந்த கமிட்டி டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நேர்மையான முறையில் நடைபெற்று வருவதை நிலைநிறுத்தவும், நம்பகத்தன்மையை காக்கவும் சில பரிந்துரைகளை செய்து இருக்கிறது. அதனை நாங்கள் பின்பற்றுவோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X