என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியா தொடரில் இந்தியா செய்ததை அப்படியே பின்பற்ற விரும்புகிறோம்: இலங்கை பயிற்சியாளர்
Byமாலை மலர்23 Jan 2019 12:07 PM GMT (Updated: 23 Jan 2019 12:07 PM GMT)
இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் என்ன செய்ததோ? அதை அப்படியே பின்பற்ற விரும்புகிறோம் என இலங்கை அணி நம்பிக்கை தெரிவித்துள்ளது. #AUSvSL
இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் பகல்- இரவு டெஸ்டான முதல் ஆட்டம் பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா தொடர் குறித்து இலங்கை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ருமேஷ் ரத்னாயகே கூறியதாவது:-
2 டெஸ்ட் போட்டிகளுக்காக இந்திய அணியின் பவுலிங் யுக்திகளை ஆராய்ந்து வருகிறோம். எந்தெந்த இடங்களில் இந்திய பவுலர்கள் வீசினார்கள் என்பதை நாங்கள் பார்த்து வருகிறோம். அதாவது இந்திய அணி பவுலர்கள் என்ன செய்தார்களோ, மற்ற அணியினர் என்ன செய்தார்களோ அதை நாமும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை இலங்கை பவுலர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய விஷயமாகும் இது. அந்த நம்பிக்கையைத்தான் இப்போதைக்கு நாங்கள் ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம்.
பேட்டிங், பவுலிங், ஏன் பீல்டிங்கிலும் கூட இந்திய அணி நிரூபித்துள்ளது, எங்கு சென்றாலும் நிரூபித்து வருகின்றனர். இதைத்தான் இந்திய அணியிடமிருந்து நாங்கள் எடுத்துக் கொள்ள விரும்புகிறோம். இங்கு டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்துள்ளோம். நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா செல்கிறோம். ஆகவே ஆஸ்திரேலியாவில் வெல்ல வேண்டும் என்பது விருப்பம். பார்ப்போம். இந்த முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்த நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் திட்டவட்டாக கூறமாட்டேன்.
இவ்வாறு கூறினார் ருமேஷ் ரத்னாயகே.
ஆஸ்திரேலியா தொடர் குறித்து இலங்கை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ருமேஷ் ரத்னாயகே கூறியதாவது:-
2 டெஸ்ட் போட்டிகளுக்காக இந்திய அணியின் பவுலிங் யுக்திகளை ஆராய்ந்து வருகிறோம். எந்தெந்த இடங்களில் இந்திய பவுலர்கள் வீசினார்கள் என்பதை நாங்கள் பார்த்து வருகிறோம். அதாவது இந்திய அணி பவுலர்கள் என்ன செய்தார்களோ, மற்ற அணியினர் என்ன செய்தார்களோ அதை நாமும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை இலங்கை பவுலர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய விஷயமாகும் இது. அந்த நம்பிக்கையைத்தான் இப்போதைக்கு நாங்கள் ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம்.
பேட்டிங், பவுலிங், ஏன் பீல்டிங்கிலும் கூட இந்திய அணி நிரூபித்துள்ளது, எங்கு சென்றாலும் நிரூபித்து வருகின்றனர். இதைத்தான் இந்திய அணியிடமிருந்து நாங்கள் எடுத்துக் கொள்ள விரும்புகிறோம். இங்கு டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்துள்ளோம். நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா செல்கிறோம். ஆகவே ஆஸ்திரேலியாவில் வெல்ல வேண்டும் என்பது விருப்பம். பார்ப்போம். இந்த முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்த நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் திட்டவட்டாக கூறமாட்டேன்.
இவ்வாறு கூறினார் ருமேஷ் ரத்னாயகே.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X