search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது டி20 கிரிக்கெட்- பும்ரா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு
    X

    3-வது டி20 கிரிக்கெட்- பும்ரா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 3-வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 எனக்கைப்பற்றியது.

    3-வது மற்றும் கடைசி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளைமறுதினம் நடக்கிறது. இதற்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த பும்ரா, குல்தீப் யாதவ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்த உடன் இந்தியா ஆஸ்திரேலியா செல்கிறது. வெளிநாட்டு தொடருக்கு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதால் இந்த ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    3-வது போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ரோகித் சர்மா, 2. ஷிகர் தவான், 3. கேஎல் ராகுல், 4. தினேஷ் கார்த்திக், 5. மணிஷ் பாண்டே, 6. ஷ்ரேயாஸ் அய்யர், 7. ரிஷப் பந்த், 8. குருணால் பாண்டியா, 9. வாஷிங்டன் சுந்தர், 10. சாஹல், 11. புவனேஸ்வர் குமார், 12. கலீல் அஹமது, 13. ஷபாஸ் நதீம், 14. சித்தார்த் கவுல்.
    Next Story
    ×