search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சவுத்தாம்டன் டெஸ்ட் - இந்தியா அபார பந்துவீச்சு 7 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறல்
    X

    சவுத்தாம்டன் டெஸ்ட் - இந்தியா அபார பந்துவீச்சு 7 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறல்

    சவுத்தாம்டனில் இன்று தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் அபாரமாக பந்து வீசி வருவதால் 171 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து அணி திணறி வருகிறது. #INDvsENG
    லண்டன் :

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு டெஸ்டுகளில் இங்கிலாந்தும், நாட்டிங்காமில் நடந்த 3–வது டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4–வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவ்ல் ஸ்டேடியத்தில் இன்று  தொடங்கியது. ஒரு வார கால ஓய்வுக்கு பிறகு இரு அணி வீரர்களும் புத்துணர்ச்சியுடன் களம் இறங்கி விளையாடி வருகின்றனர்.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 15 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தவித்து வருகிறது. பூம்ரா தனது முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். ஆட்டத்தில் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் தொடக்க வீரரான ஜென்னிங்ஸ் ஆட்டமிழந்தார்.

    இதைத் தொடர்ந்து கேப்டன் ரூட் 4 ரன்களில் இஷாந்த் சர்மா ஓவரில் எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டிகலில் 250 விக்கெட்டுக்களை வீழ்த்திய 3-வது வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை இஷாந்த் சர்மா படைத்தார்.

    இதைத்தொடர்ந்து பேய்ர்ஸ்டோ 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய குக் 18வது ஓவரில் மூன்றாவது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.



    5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பட்லரும், பென் ஸ்டோக்சும் இந்திய பந்துவீச்சாளர்களின் உத்திகளை கணித்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் ஆட்டத்தின் 26-வது ஓவரில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பட்லரும், 34-வது ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்த ஸ்டோக்சும் ஷமியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

    சிறப்பாக விளையாடிய மொயின் அலியை தனது சுழலில் வீழ்த்தினார் அஷ்வின், அவர் 40 ரன்கள் எடுத்திருந்தார். 7-வது விக்கெட்டுக்கு மொயின் அலியும், குர்ரனும் இணைந்து 81-ரன்கள் சேர்த்தனர்.

    இதனால் 61 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 171 ரன்களுடன் இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடி வருகிறது. சாம் குர்ரன் 37 ரன்களுடனும், ரஷித் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

    இந்திய அணி தரப்பில் பூம்ரா மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டுக்களையும், பாண்டியா, இஷாந்த் சர்மா, அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். #INDvsENG
    Next Story
    ×