என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விராட் கோலிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு
Byமாலை மலர்23 Aug 2018 10:16 AM GMT (Updated: 23 Aug 2018 10:16 AM GMT)
டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் வெற்றியை கேரள வெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு அர்ப்பணித்த இந்திய அணி கேப்டனுக்கு பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார். #ViratKohli
டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் வெற்றியை கேரள வெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு அர்ப்பணித்த இந்திய அணி கேப்டனுக்கு பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார். #ViratKohli
இங்கிலாந்தில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை இந்திய அணி கேரள மக்களுக்கு சமர்ப்பிப்பதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தார்.
இதற்காக விராட் கோலிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார். ‘‘கேரள மாநில மக்களுக்கு கிரிக்கெட் வெற்றியை சமர்ப்பித்ததற்கு நன்றி. இந்திய அணியின் வெற்றிக்கு எங்களது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்று அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நேற்றைய டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றதும், ‘‘இந்த டெஸ்ட் வெற்றியை கேரளா வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம். அவர்களுக்கு தற்போது கடினமான நேரம்’’ என்று கூறினார்.
இந்திய அணி வீரர்கள் 3-வது டெஸ்டில் கிடைக்கும் சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்க இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை இந்திய அணி கேரள மக்களுக்கு சமர்ப்பிப்பதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தார்.
இதற்காக விராட் கோலிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார். ‘‘கேரள மாநில மக்களுக்கு கிரிக்கெட் வெற்றியை சமர்ப்பித்ததற்கு நன்றி. இந்திய அணியின் வெற்றிக்கு எங்களது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்று அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நேற்றைய டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றதும், ‘‘இந்த டெஸ்ட் வெற்றியை கேரளா வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம். அவர்களுக்கு தற்போது கடினமான நேரம்’’ என்று கூறினார்.
இந்திய அணி வீரர்கள் 3-வது டெஸ்டில் கிடைக்கும் சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்க இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X