search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎல் 2018- ஒரே ஓவரில் 32 ரன்கள் வாரி வழங்கி மோசமான சாதனைப் படைத்த காரைக்குடி காளை வீரர்
    X

    டிஎன்பிஎல் 2018- ஒரே ஓவரில் 32 ரன்கள் வாரி வழங்கி மோசமான சாதனைப் படைத்த காரைக்குடி காளை வீரர்

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிராக ஒரே ஓவரில் 32 ரன்கள் வழங்கி மோசமான சாதனையை பதிவு செய்தார் மோகன் பிரசாத் #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 21-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. காரைக்குடி காளை அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    ஆட்டத்தின் 16-வது ஓவரை காரைக்குடி காளை அணியின் மோகன் பிரசாத் வீசினார். இந்த ஓவரை திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் ஆர் விவேக் சந்தித்தார். முதல் பந்தை லாங்-ஆஃப் திசையில் சிக்சருக்கு தூக்கினார் விவேக். 2-வது பந்தை லாங்-ஆன் திசையில் சிக்சருக்கு தூக்கினார்.



    3-வது பந்தை டீப் எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தை ஓவர் லாங்-ஆஃப் திசையில் சிக்ஸ் விளாசினார். 5-வது பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். இதனால் ஐந்து பந்தில் 28 ரன்கள் அடித்தார்.

    இதன்மூலம் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்ததை சமன் செய்தார் மோகன் பிரசாத். கடைசி பந்தை பவுண்டரிக்கு தூக்கினார் விவேக். இதன்மூலம் மோகன் பிரசாத் ஒரே ஓவரில் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து அதிக ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை படைத்துள்ளார்.
    Next Story
    ×