search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றிக்கான பெருமை பந்துவீச்சாளர்களை சாரும்- காரைக்குடி வீரர் ஸ்ரீநிவாசன்
    X

    வெற்றிக்கான பெருமை பந்துவீச்சாளர்களை சாரும்- காரைக்குடி வீரர் ஸ்ரீநிவாசன்

    காஞ்சி வீரன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு பந்துவீச்சாளர்களே காரணம் என காரைக்குடி அணியின் கேப்டன் ஸ்ரீநிவாசன் கூறியுள்ளார். #TNPL2018 #KKvVKV #Srinivasan
    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று 8-வது லீக் ஆட்டத்தில் காஞ்சி அணி நிர்ணயித்த 146 ரன் இலக்கை எடுத்து காரைக்குடி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி குறித்து அந்த அணி வீரர் ஸ்ரீநிவாசன் கூறியதாவது:-

    இந்த வெற்றிக்கு அனைத்து பெருமைகளும் பந்து வீச்சாளர்களையே சாரும். அணி வீரர்கள் விவாதத்தின் போது என்று திட்டமிட்டோமோ அதை அப்படியே செயல்படுத்தினோம். இது போன்ற ஆடுகளத்தில் எதிரணியை 145 ரன்னுக்குள் கட்டுபடுத்துவது என்பது பெரிய வி‌ஷயம் தான். எங்களது பந்து வீச்சு அற்புதமாக இருந்தது.

    திண்டுக்கல் மைதானத்தில் அனிருதா தொடர்ச்சியாக 4-வது அரைசதம் அடித்து உள்ளார். அவர் நல்ல பார்மில் இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNPL2018 #NammaOoruNammaGethu #KK #Srinivasan
    Next Story
    ×