search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    20 ஓவர் தொடரை வெல்வது யார்? இந்தியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை
    X

    20 ஓவர் தொடரை வெல்வது யார்? இந்தியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாட்டிங்காமில் இன்று நடக்கிறது. இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் தொடரை வெல்வது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    நாட்டிங்காம்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் தொடரில் மான்செஸ்டரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்திலும், கார்டியாவில் நடந்த 2-வது போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் இருக்கிறது.

    முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர்கள் 2-வது ஆட்டத்தில் சொதப்பிவிட்டனர். தொடரை வெல்ல முக்கியமான போட்டி என்பதால் அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டும்.

    ரோகித் சர்மா, தவான் ஜோடியின் தொடக்கம் சிறப்பாக இருந்தால் மட்டுமே அதிகமான ரன்களை குவிக்க இயலும். முதல் போட்டியில் சாதித்த ராகுல், குப்தீல் யாதவ் ஆகியோர் 2-வது போட்டியில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

    இரு அணிகளும் தொடரை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். இரு அணிகளும் இன்று மோதுவது 14-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 13 போட்டியில் இந்தியா 6, இங்கிலாந்து 7-ல் வெற்றி பெற்றுள்ளன.

    இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சோனி சிக்ஸ் டெலிவிசனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #T20 #ENGvIND #TeamIndia
    Next Story
    ×