என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விம்பிள்டன்- மூன்றேகால் மணி நேரம் போராடி தோல்வியை சந்தித்த 3-ம் நிலை வீரர்
Byமாலை மலர்5 July 2018 3:16 PM GMT (Updated: 5 July 2018 3:16 PM GMT)
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் மூன்றேகால் மணி நேரம் போராடி தோல்வியை சந்தித்துள்ளார் 3-ம் நிலை வீரர் மரின் சிலிச். #Wimbledon2018 #Cilic
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த முறை 2-ம் இடம் பிடித்தவரும், 3-ம் நிலை வீரரும் ஆன குரோசியாவின் மரின் சிலிச், தரநிலை பெறாத அர்ஜென்டினாவின் கிடோ பெல்லாவை எதிர்கொண்டார்.
முதல் இரண்டு செட்டுகளையும் மரின் சிலிச் 6-3, 6-1 என எளிதில் கைப்பற்றினார். இதனால் 3-வது செட்டை கைப்பற்றி 3-வது சுற்றுக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 2-வது செட் முடிவடைந்த பின்னர் பெல்லா ஆட்டத்தில் அனல் பறந்தது. மரின் சிலிச்சை அதிர வைத்தார். 3-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். 4-வது செட்டிலும் கடும் போட்டி கொடுத்தார். மரின் சிலிச்சும் பதிலடி கொடுக்க ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் பெல்லா 7(7) - 6 (3) என கைப்பற்றினார்.
இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 5-வது செட்டில் இருவரும் களம் இறங்கினார்கள். இதிலும் மரின் சிலிச்சால் ஜொலிக்க முடியவில்லை. 5-வது செட்டை 5-7 என இழந்தார். இதனால் கடைசி மூன்று செட்டுகளை தொடர்ந்து இழந்து 2-வது செட்டோடு விடைபெற்றார் மரின் சிலிச்.
மரின் சிலிச்சை வெளியேற்றிய பெல்லா இதுவரை கிராண்ட் ஸ்லாம் தொடரில் 2-வது சுற்றை தாண்டியதே கிடையாது. தற்போது 3-ம் நிலை வீரரை வீழ்த்தி 3-வது சுற்றிற்கு முன்னேறியுள்ளார்.
முதல் இரண்டு செட்டுகளையும் மரின் சிலிச் 6-3, 6-1 என எளிதில் கைப்பற்றினார். இதனால் 3-வது செட்டை கைப்பற்றி 3-வது சுற்றுக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 2-வது செட் முடிவடைந்த பின்னர் பெல்லா ஆட்டத்தில் அனல் பறந்தது. மரின் சிலிச்சை அதிர வைத்தார். 3-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். 4-வது செட்டிலும் கடும் போட்டி கொடுத்தார். மரின் சிலிச்சும் பதிலடி கொடுக்க ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் பெல்லா 7(7) - 6 (3) என கைப்பற்றினார்.
இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 5-வது செட்டில் இருவரும் களம் இறங்கினார்கள். இதிலும் மரின் சிலிச்சால் ஜொலிக்க முடியவில்லை. 5-வது செட்டை 5-7 என இழந்தார். இதனால் கடைசி மூன்று செட்டுகளை தொடர்ந்து இழந்து 2-வது செட்டோடு விடைபெற்றார் மரின் சிலிச்.
மரின் சிலிச்சை வெளியேற்றிய பெல்லா இதுவரை கிராண்ட் ஸ்லாம் தொடரில் 2-வது சுற்றை தாண்டியதே கிடையாது. தற்போது 3-ம் நிலை வீரரை வீழ்த்தி 3-வது சுற்றிற்கு முன்னேறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X