என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் பெடரர், செரீனா
Byமாலை மலர்4 July 2018 11:13 PM GMT (Updated: 4 July 2018 11:13 PM GMT)
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெடரர், செரீனா 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். #Wimbledon2018 #Federer #SerenaWilliams
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் பிரிவில் 8 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-4, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் லுகாஸ் லாக்கோவை (சுலோவக்கியா) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். பெடரர் அடுத்து ஜெர்மனியின் ஜான் லினார்ட் ஸ்டிரப்பை சந்திக்கிறார்.
கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் தன்னை எதிர்த்த ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மானை 7-6 (4), 7-6 (4), 7-6 (4) என்ற நேர் செட்டில் விரட்டினார். இதே போல் கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்), மெக்டொனால்டு, சாம் குயரி (அமெரிக்கா) ஆகியோரும் 2-வது தடையை கடந்தனர்.
பெண்கள் பிரிவில் குழந்தை பெற்றுக் கொண்டு களம் திரும்பியுள்ள அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டோமோவை (பல்கேரியா) பந்தாடினார். வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), கரோலினா பிளிஸ்கோவா, சபரோவா (செக்குடியரசு), மேடிசன் கீஸ் (அமெரிக்கா) உள்ளிட்டோர் தங்களது 2-வது சுற்று ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.
அதே சமயம் 2-ம் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை 6-4, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் ரஷியாவின் மகரோவா வீழ்த்தினார்.
முன்னதாக, முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ரஷியாவின் மரிய ஷரபோவா நேற்று முன்தினம் இரவு நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் 7-6 (3), 6-7 (3), 4-6 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் விடாலியா டையட்சென்கோவிடம் போராடி வீழ்ந்தார். இந்த ஆட்டம் 3 மணி 8 நிமிடங்கள் நீடித்தது. #Wimbledon2018 #Federer #SerenaWilliams #tamilnews
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் பிரிவில் 8 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-4, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் லுகாஸ் லாக்கோவை (சுலோவக்கியா) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். பெடரர் அடுத்து ஜெர்மனியின் ஜான் லினார்ட் ஸ்டிரப்பை சந்திக்கிறார்.
கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் தன்னை எதிர்த்த ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மானை 7-6 (4), 7-6 (4), 7-6 (4) என்ற நேர் செட்டில் விரட்டினார். இதே போல் கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்), மெக்டொனால்டு, சாம் குயரி (அமெரிக்கா) ஆகியோரும் 2-வது தடையை கடந்தனர்.
பெண்கள் பிரிவில் குழந்தை பெற்றுக் கொண்டு களம் திரும்பியுள்ள அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டோமோவை (பல்கேரியா) பந்தாடினார். வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), கரோலினா பிளிஸ்கோவா, சபரோவா (செக்குடியரசு), மேடிசன் கீஸ் (அமெரிக்கா) உள்ளிட்டோர் தங்களது 2-வது சுற்று ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.
அதே சமயம் 2-ம் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை 6-4, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் ரஷியாவின் மகரோவா வீழ்த்தினார்.
முன்னதாக, முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ரஷியாவின் மரிய ஷரபோவா நேற்று முன்தினம் இரவு நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் 7-6 (3), 6-7 (3), 4-6 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் விடாலியா டையட்சென்கோவிடம் போராடி வீழ்ந்தார். இந்த ஆட்டம் 3 மணி 8 நிமிடங்கள் நீடித்தது. #Wimbledon2018 #Federer #SerenaWilliams #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X