search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் தொடரில் விளையாடியது எங்களுக்கு சாதகம் - இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன்
    X

    ஐபிஎல் தொடரில் விளையாடியது எங்களுக்கு சாதகம் - இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன்

    இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற அனுபவம் இங்கிலாந்து வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என அந்த அணியின் கேப்டன் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார். #ENGvIND
    லண்டன் :

    3 டி-20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்திய நேரப்படி நாளை இரவு 10 மணிக்கு மான்செஸ்டரில் துவங்குகிறது.

    நாளை துவங்கும் டி20 கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இங்கிலாந்து வீரர்கள் மன்செஸ்டர் ஓல்ட் ட்ரபோர்ட் மைதானத்தில் இன்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து அணி கேப்டன் இயன் மோர்கன், அவர்களிடம் குறிப்பிட்டுள்ளதாவது :-

    ‘இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடிய அனுபவம் நிச்சயமாக இங்கிலாந்து வீரர்களுக்கு சாதகமான அம்சம் ஆகும். இதை பயன்படுத்தி எங்கள் வீரர்கள், இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவார்கள். இருப்பினும் இந்திய அணியுடன் விளையாடுவது எப்போதும் சவாலானது’ என அவர் தெரிவித்தார்.  #ENGvIND
    Next Story
    ×