என் மலர்
செய்திகள்

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்த முரளிதரன், ஜெயவர்தனே
இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை நிராகரித்தனர் முரளிதரன், ஜெயவர்தனே. #Muralitharan #Jayawardene
இலங்கை அணி முரளிதரன், சங்ககரா, ஜெயவர்தனே விளையாடிய காலத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு இலங்கை அணி தடுமாறி வருகிறது. இந்தியாவிற்கு எதிராக சொந்த மைதானத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது.
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இழந்தது. இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடக்க சுற்றோடு வெளியேறியது. தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இதனால் இலங்கை அணியை வெற்றிப் பாதையில் மீண்டும் கொண்டு வர ஆலோசனை வழங்க வேண்டும் என்று முரளிதரன், ஜெயர்வதனேயிடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டது. ஆனால், இருவரும் ஆலோசனை வழங்கும் பணியில் சேர மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து முரளிதரன் கூறுகையில் ‘‘கிரிக்கெட் நிர்வாகம் மோசனமான நிலையில் இருக்கும்போது, எங்களை அழைப்பது நேர்மையற்ற, தந்திரமான செயல்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஜெயவர்தனே ‘‘இந்த முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை. யாராவது ஒருவர் நேரத்தை விரயமாக்க விரும்பினால், எங்களை பயன்படுத்தாதீர்கள்’’ என்று தெரிவித்துள்ளார். ஜெயவர்தனே இதற்கு முன் ஒரு பயிற்சியாளர் பெயரை பரிந்துரை செய்திருந்தார். இதை இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இழந்தது. இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடக்க சுற்றோடு வெளியேறியது. தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இதனால் இலங்கை அணியை வெற்றிப் பாதையில் மீண்டும் கொண்டு வர ஆலோசனை வழங்க வேண்டும் என்று முரளிதரன், ஜெயர்வதனேயிடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டது. ஆனால், இருவரும் ஆலோசனை வழங்கும் பணியில் சேர மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து முரளிதரன் கூறுகையில் ‘‘கிரிக்கெட் நிர்வாகம் மோசனமான நிலையில் இருக்கும்போது, எங்களை அழைப்பது நேர்மையற்ற, தந்திரமான செயல்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஜெயவர்தனே ‘‘இந்த முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை. யாராவது ஒருவர் நேரத்தை விரயமாக்க விரும்பினால், எங்களை பயன்படுத்தாதீர்கள்’’ என்று தெரிவித்துள்ளார். ஜெயவர்தனே இதற்கு முன் ஒரு பயிற்சியாளர் பெயரை பரிந்துரை செய்திருந்தார். இதை இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






