என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓய்வு காலம் முன்பைவிட நெருங்கியுள்ளது - கிராண்ட் ஸ்லாம் கிங் பெடரர்
Byமாலை மலர்15 Jun 2018 10:56 AM GMT (Updated: 15 Jun 2018 10:56 AM GMT)
ஓய்வு காலம் முன்பைவிட நெருங்கியுள்ளது என்று 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார். #RogerFederer
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரர் டென்னிஸ் அரங்கில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறது. 36 வயதாகும் இவர் 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற, ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கடந்த வருடம் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாத்தை கைப்பற்றிய பெடரர், இந்த வருடம் தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனை வென்றார். பிரெஞ்ச் ஓபனில் விளையாடாத அவர், விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் களம் இறங்குகிறார்.
36 வயதாகும் பெடரரிடம் ஓய்வு குறித்து கேள்வி கேட்கும்போதெல்லாம், டென்னிசை நான் ரசித்து விளையாடிக் கொண்டிருக்கிறேன். ஓய்வு பற்றி யோசிக்கவில்லை என்பார்.
ஆனால், தற்போது தன்னுடைய ஓய்வு முன்பைவிட நெருங்கி வருகிறது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெடரர் கூறுகையில் ‘‘என்னுடைய ஓய்வு முன்பை விட நெருங்கியுள்ளது. ஆனால், அது எப்போது முடிவிற்கு வரும் என்று எனக்கே தெரியாது.
அது மிகவும் சுவாரஸ்யமாகவும், வேடிக்கையாகவும் இருக்கும். குறிப்பாக என்னுடைய குழந்தைகளையும், அவர்களை பள்ளிகளுக்கு செல்வதும் முக்கியமானது. அது எப்படி இருக்கப் போகிறது என்பதில் நான் ஆர்வமாக உள்ளேன்’’ என்றார்.
கடந்த வருடம் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாத்தை கைப்பற்றிய பெடரர், இந்த வருடம் தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனை வென்றார். பிரெஞ்ச் ஓபனில் விளையாடாத அவர், விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் களம் இறங்குகிறார்.
36 வயதாகும் பெடரரிடம் ஓய்வு குறித்து கேள்வி கேட்கும்போதெல்லாம், டென்னிசை நான் ரசித்து விளையாடிக் கொண்டிருக்கிறேன். ஓய்வு பற்றி யோசிக்கவில்லை என்பார்.
ஆனால், தற்போது தன்னுடைய ஓய்வு முன்பைவிட நெருங்கி வருகிறது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெடரர் கூறுகையில் ‘‘என்னுடைய ஓய்வு முன்பை விட நெருங்கியுள்ளது. ஆனால், அது எப்போது முடிவிற்கு வரும் என்று எனக்கே தெரியாது.
அது மிகவும் சுவாரஸ்யமாகவும், வேடிக்கையாகவும் இருக்கும். குறிப்பாக என்னுடைய குழந்தைகளையும், அவர்களை பள்ளிகளுக்கு செல்வதும் முக்கியமானது. அது எப்படி இருக்கப் போகிறது என்பதில் நான் ஆர்வமாக உள்ளேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X