என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
இந்தியா - இலங்கை ஒருநாள் தொடர்: முதல் இரண்டு போட்டிகளின் நேரம் மாற்றம்
Byமாலை மலர்19 Nov 2017 2:34 PM GMT (Updated: 19 Nov 2017 2:34 PM GMT)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.
முதல் போட்டி டிசம்பர் 10-ந்தேதி தரம்சாலாவிலும், 2-வது போட்டி டிசம்பர் 13-ந்தேதி மொகாலியிலும், 3-வது மற்றும் கடைசி போட்டியி டிசம்பர் 17-ந்தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.
பகல்-இரவு ஆட்டம் என்பதால் போட்டிகள் அனைத்தும் மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் மாதம் வடமாநிலங்களில் அதிக அளவில் குளிர் நிலவும். இதனைக் காரணம் காட்டி தரம்சாலா மற்றும் மொகாலி ஆட்டங்களில் தொடங்கும் நேரத்தை பிசிசிஐ மாற்றியுள்ளது.
மொகாலி மைதானம் (பழைய படம்)
முதலில் 1.30 மணி என்றிருந்த தொடக்க நேரத்தை தற்போது 11.30 மணியாக மாற்றியுள்ளது. 11.30 மணிக்கு போட்டி தொடங்கினால், இரவு 7.30 மணியளவில் போட்டி முடிந்துவிடும். குளிர் தாக்கம் அதிகமாக இருக்காது. இதனால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.
இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில கிரிக்கெட் சங்கத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
முதல் போட்டி டிசம்பர் 10-ந்தேதி தரம்சாலாவிலும், 2-வது போட்டி டிசம்பர் 13-ந்தேதி மொகாலியிலும், 3-வது மற்றும் கடைசி போட்டியி டிசம்பர் 17-ந்தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.
பகல்-இரவு ஆட்டம் என்பதால் போட்டிகள் அனைத்தும் மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் மாதம் வடமாநிலங்களில் அதிக அளவில் குளிர் நிலவும். இதனைக் காரணம் காட்டி தரம்சாலா மற்றும் மொகாலி ஆட்டங்களில் தொடங்கும் நேரத்தை பிசிசிஐ மாற்றியுள்ளது.
மொகாலி மைதானம் (பழைய படம்)
முதலில் 1.30 மணி என்றிருந்த தொடக்க நேரத்தை தற்போது 11.30 மணியாக மாற்றியுள்ளது. 11.30 மணிக்கு போட்டி தொடங்கினால், இரவு 7.30 மணியளவில் போட்டி முடிந்துவிடும். குளிர் தாக்கம் அதிகமாக இருக்காது. இதனால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.
இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில கிரிக்கெட் சங்கத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X