என் மலர்
செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் வீனஸ் வில்லியம்ஸ்
விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், இங்கிலாந்தின் ஜோஹன்னா கோன்டாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
லண்டன்:
லண்டன் நகரில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தின் ஜோஹன்னா கோன்டாவும், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸும் மோதினர். கடந்த 33 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக காலிறுதி போட்டிக்கு ஜோனா கோண்டா தகுதிபெற்றார். அவர் தனது திறமையான ஆட்டத்தால் அரையிறுதிக்குள் நுழைந்தார்.
இந்த வருடம், இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் விம்பிள்டன் கோப்பையை வெல்வார் என அந்நாட்டு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், அரையிறுதி போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார். இதன்மூலம் இங்கிலாந்து ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
முன்னாதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் முகுருசா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக விம்பிள்டன் இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளார். விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் இறுதிபோட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் - முகுருசா சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
Next Story






