search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா அணியுடன் இணைந்தார் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்
    X

    கொல்கத்தா அணியுடன் இணைந்தார் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்

    இந்திய டெஸ்ட் அணியில் விளையாடியதற்காக ஓய்வு எடுத்த உமேஷ் யாதவ், தற்போது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ். ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய அணி இந்த சீசனில் 13 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடியது. இந்த சீசனில் உமேஷ் யாதவ் தொடர்ந்து விளையாடி அதிக அளவில் ஓவர்கள் வீசினார். இதனால் சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டது.

    அதன்படி கொல்கத்தா அணி விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் உமேஷ் யாதவ் பங்கேற்கவில்லை. கொல்கத்தா அணி 3-வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வருகிற 13-ந்தேதி சந்திக்கிறது.

    இந்த போட்டியில் விளையாடுவதற்காக உமேஷ் யாதவ் கொல்கத்தா சென்றுள்ளார். இதுகுறித்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உமேஷ் யாதவ் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் படத்தை வெளியிட்டு ‘‘அணியுடன் உமேஷ் யாதவ் இணைந்து விட்டார்’’ என்று குறிப்பிட்டுள்ளது.

    இதனால் கொல்கத்தா அணி மோதும் அடுத்த போட்டியில் உமேஷ் யாதவ் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
    Next Story
    ×