என் மலர்
செய்திகள்

பார்சிலோனாவிற்காக 100 கோல்கள் அடித்து நெய்மர் அசத்தல்
பிரேசில் நாட்டின் கால்பந்து அணியின் கேப்டனான நெய்மர் பார்சிலோனா அணிக்காக தனது 100-வது கோலை பதிவு செய்துள்ளார்.
பிரேசில் நாட்டின் கால்பந்து அணியின் கேப்டனான நெய்மர் பார்சிலோனா அணிக்காக தனது 100-வது கோலை பதிவு செய்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் மிகப்பெரிய தொடர் லா லிகா கால்பந்து தொடர். இதில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் ஆகியவை தலைசிறந்த அணிகள். பார்சிலோனா அணியில் மெஸ்சி, சுவாரஸ், நெய்மர் ஆகிய மூன்று தலைசிறந்த வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.
பிரேசில் அணியின் சிறந்த வீரராக வலம் வந்த நெய்மரை 2013-ம் ஆண்டு பார்சிலோனா சாண்டோஸ் கிளப்பிடம் இருந்து வாங்கியது. அந்த ஆண்டு சூப்பர்கோபா தொடரில் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்கெதிராக தனது முதல் கோலை பதிவு செய்தார்.
லா லிகா தொடரில் நேற்று நடைபெற்ற கிரேனடாவிற்கு எதிரான போட்டியில் பார்சிலோனா 4-1 என வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பார்சிலோனாவிற்கான நான்காவது கோலை நெய்மர் அடித்தார்.
இதன் மூலம் பார்சிலோனா அணிக்காக தனது 100-வது கோலை பதிவு செய்தார். அந்த அணிக்காக நெய்மர் 177 முறை களமிறங்கி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். மெஸ்சி 188 போட்டிகளில்தான் 100-வது கோலை தொட்டார்.
லா லிகா தொடரில் 64 கோல்களும், சாம்பியன்ஸ் லீக் தொடரில் 21 கோல்களும், கோபா டெல் ரெய் தொடரில் 14 கோல்களும், ஸ்பெயின் சூப்பர்கோபா தொடரில் ஒரு கோலும் அடித்துள்ளார்.
பார்சிலோனா அணியுடன் 2021-ம் ஆண்டு வரை விளையாட நெய்மர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பி்டத்தக்கது.
Next Story






