என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தமிழில் வர்ணனை
Byமாலை மலர்25 March 2017 3:48 AM GMT (Updated: 25 March 2017 3:48 AM GMT)
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தமிழ், பெங்கால், தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளில் வர்ணனையுடன் சோனி இ.எஸ்.பி.என். மற்றும் சோனி இ.எஸ்.பி.என். எச்.டி. சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
சென்னை :
10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஏப்ரல் 5-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை சோனி டெலிவிஷன் குழுமம் பெற்றுள்ளது. போட்டிகள் ஆங்கிலம் மற்றும் இந்தி வர்ணனையுடன் ஒளிபரப்பப்படுவது வழக்கமாகும்.
பிராந்திய ரசிகர்களையும் அதிகம் கவரும் வகையில் மண்டல மொழிகளிலும் இந்த போட்டியை ஒளிபரப்ப சோனி குழுமம் முடிவு செய்துள்ளது. தமிழ், பெங்கால், தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளில் வர்ணனையுடன் சோனி இ.எஸ்.பி.என். மற்றும் சோனி இ.எஸ்.பி.என். எச்.டி. சேனல்களில் இந்த போட்டி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
தமிழ் வர்ணனையாளர்கள் குழுவில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஹேமங் பதானி, வி.பி.சந்திரசேகர், பட்டாபிராமன், வி.சத்தியநாராயணன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்த தகவலை சோனி டெலிவிஷன் குழும அதிகாரி பிரசன்னா கிருஷ்ணன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஏப்ரல் 5-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை சோனி டெலிவிஷன் குழுமம் பெற்றுள்ளது. போட்டிகள் ஆங்கிலம் மற்றும் இந்தி வர்ணனையுடன் ஒளிபரப்பப்படுவது வழக்கமாகும்.
பிராந்திய ரசிகர்களையும் அதிகம் கவரும் வகையில் மண்டல மொழிகளிலும் இந்த போட்டியை ஒளிபரப்ப சோனி குழுமம் முடிவு செய்துள்ளது. தமிழ், பெங்கால், தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளில் வர்ணனையுடன் சோனி இ.எஸ்.பி.என். மற்றும் சோனி இ.எஸ்.பி.என். எச்.டி. சேனல்களில் இந்த போட்டி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
தமிழ் வர்ணனையாளர்கள் குழுவில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஹேமங் பதானி, வி.பி.சந்திரசேகர், பட்டாபிராமன், வி.சத்தியநாராயணன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்த தகவலை சோனி டெலிவிஷன் குழும அதிகாரி பிரசன்னா கிருஷ்ணன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X