என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எஃப்.ஏ. கோப்பை: மான்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தி அரையிறுதியில் செல்சியா
Byமாலை மலர்14 March 2017 9:42 AM GMT (Updated: 14 March 2017 9:42 AM GMT)
எஃப்.ஏ. கோப்பைக்கான காலிறுதியில் 10 பேருடன் விளையாடிய மான்செஸ்டர் அணியை 1-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது செல்சியா.
இங்கிலாந்து நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் தொடர் எஃப்.ஏ. இந்த தொடரில் கடைசி காலிறுதியில் முன்னணி அணிகளான மான்செஸ்டர் யுனைடெட் - செல்சியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
மான்செஸ்டர் அணி இப்ராஹிமோவிச் இல்லாமல் களம் இறங்கியது. 30-வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணியின் அன்டர் ஹெரேரா இரண்டு மஞ்சள் அட்டை வாங்கியதால் வெளியேற்றப்பட்டார். இதனால் மான்செஸ்டர் அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இரண்டு அணிகளும் முதல் பாதி நேரத்தில் கோல்கள் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் செல்சியா அணியின் என்'கோலா கேன்டே ஒரு கோல் அடித்தார். அதன்பின் ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் செல்சியா 1-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
செல்சியா அரையிறுதியில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியுடனும், அர்செனல் மான்செஸ்டர் சிட்டி அணியுடனும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
மான்செஸ்டர் அணி இப்ராஹிமோவிச் இல்லாமல் களம் இறங்கியது. 30-வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணியின் அன்டர் ஹெரேரா இரண்டு மஞ்சள் அட்டை வாங்கியதால் வெளியேற்றப்பட்டார். இதனால் மான்செஸ்டர் அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இரண்டு அணிகளும் முதல் பாதி நேரத்தில் கோல்கள் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் செல்சியா அணியின் என்'கோலா கேன்டே ஒரு கோல் அடித்தார். அதன்பின் ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் செல்சியா 1-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
செல்சியா அரையிறுதியில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியுடனும், அர்செனல் மான்செஸ்டர் சிட்டி அணியுடனும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X