search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில வாள் வீச்சு: சென்னை வீரர் தங்கப்பதக்கம் வென்றார்
    X

    மாநில வாள் வீச்சு: சென்னை வீரர் தங்கப்பதக்கம் வென்றார்

    நாமக்கல் மாவட்டத்தில் நடந்த முதல்- அமைச்சர் கோப்பைக்கான மாநில வாள் வீச்சு போட்டியில் ஆண்களுக்கான சேபர் அணிகள் பிரிவில் சென்னை பெரவள்ளூர் டான்போஸ்கோ பள்ளியை சேர்ந்த அஸ்வின் நம்பியார் தங்கப்பதக்கம் வென்றார்.
    சென்னை :

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்- அமைச்சர் கோப்பைக்கான மாநில வாள் வீச்சு போட்டி நாமக்கல் மாவட்டத்தில் நடந்தது. இதில் ஆண்களுக்கான சேபர் அணிகள் பிரிவில் சென்னை பெரவள்ளூர் டான்போஸ்கோ பள்ளியை சேர்ந்த 17 வயதான அஸ்வின் நம்பியார் தங்கப்பதக்கம் வென்றார்.

    மாநில அளவிலான போட்டியில் அவர் தொடர்ந்து 5-வது முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறார். தங்கப்பதக்கம் வென்ற அஸ்வின் நம்பியாருக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
    Next Story
    ×