search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமனம்
    X

    டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமனம்

    விஜய் ஹசாரே தொடருக்கான டெல்லி அணியின் கேப்டனாக காம்பீருக்குப் பதிலாக இளம் வீரரான இசாந்த் பந்த் நியமிக்கபட்டுள்ளார்.
    மாநில அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் வருகிற 25-ந்தேதி தொடங்கி மார்ச் மாதம் 18-ந்தேதி வரை நடக்கிறது. ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள டெல்லி அணி 6 லீக் போட்டியில் விளையாடுகிறது.

    இந்த சீசனில் மாநில அணிகளுக்கு இடையிலான கடைசி தொடர் இதுவாகும். இந்த தொடருக்கான டெல்லி அணியின் கேப்டனாக இருந்த காம்பீர் மாற்றப்பட்டு இளம் வீரரான இசாந்த் பந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இளம் வீரரான ரிஷப் பந்த் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக முதன்முறையாக அறிமுகமானார்.

    ரிஷப் பந்தை கேப்டனாக நியமித்தது குறித்து டெல்லி அணியின் தேர்வாளர் நிகில் சோப்ரா கூறுகையில் ‘‘விஜய் ஹசாரே தொடர்தான் இந்த சீசனின் கடைசி தொடர். வரும் காலத்தில் சிறந்த கேப்டனை தேர்வு செய்ய இதுதான் எங்களுக்கு சிறந்த வாய்ப்பு. கவுதம் காம்பீரை மாற்றுவதற்கு இந்த வருடத்தில் இதுவரை நாங்கள் மாற்று நபரை கண்டுபிடிக்கவில்லை.

    கவுதம் காம்பீர் மற்றும் மூத்த வீரர்களுடன் இணைந்து ரிஷப் பந்த் எப்படி கேப்டன் பதவியை வழிநடத்திச் செல்கிறார் என்பதை பரிசோதிக்க இந்த தொடர் நல்ல வாய்ப்பை கொடுத்துள்ளது. காம்பீரிடம் இருந்து சிறப்பான ஆலோசனைகள் பெறுவார். இதுகுறித்து காம்பீருடன் பேசப்பட்டது. அவரும் ஏற்றுக்கொண்டார்’’ என்றார்.
    Next Story
    ×