என் மலர்
செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன்: பெண்கள் இரட்டையர் பிரிவில் அமெரிக்க- செக்குடியரசு ஜோடி சாம்பியன்
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் அமெரிக்க - செக்குடியரசு ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
2017-ம் ஆண்டு முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் கடந்த 8-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று பெண்களுக்கான இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் பெத்தானி மாட்டேக்- சேன்ட்ஸ் (அமெரிக்கா)- லூசி சபரோவா (செக்குடியரசு) ஜோடி, சுயாய் பெங் (சீனா)- அண்டிரியா ஹவாக்கோவா (செக்குடியரசு) ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டில் இரு ஜோடியும் ஒன்றுக்கொன்று ஈடுகொடுத்து விளையாடியது. இதனால் முதல் செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் கடும் போராட்டத்திற்குப் பின் பெத்தானி மாட்டேக்- சேன்ட்ஸ் (அமெரிக்கா)- லூசி சபரோவா (செக்குடியரசு) 6 (4) - 7 (7) தோல்வியடைந்தது.
பின்னர் சுதாரித்துக்கொண்டு விளையாடிய இந்த ஜோடி 2-வது செட்டையும், 3-வது செட்டையும் தலா 6-3 எனக்கைப்பற்றி ஆஸ்திரேலிய ஒபன் தொடரை கைப்பற்றியது.
இன்று பெண்களுக்கான இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் பெத்தானி மாட்டேக்- சேன்ட்ஸ் (அமெரிக்கா)- லூசி சபரோவா (செக்குடியரசு) ஜோடி, சுயாய் பெங் (சீனா)- அண்டிரியா ஹவாக்கோவா (செக்குடியரசு) ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டில் இரு ஜோடியும் ஒன்றுக்கொன்று ஈடுகொடுத்து விளையாடியது. இதனால் முதல் செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் கடும் போராட்டத்திற்குப் பின் பெத்தானி மாட்டேக்- சேன்ட்ஸ் (அமெரிக்கா)- லூசி சபரோவா (செக்குடியரசு) 6 (4) - 7 (7) தோல்வியடைந்தது.
பின்னர் சுதாரித்துக்கொண்டு விளையாடிய இந்த ஜோடி 2-வது செட்டையும், 3-வது செட்டையும் தலா 6-3 எனக்கைப்பற்றி ஆஸ்திரேலிய ஒபன் தொடரை கைப்பற்றியது.
Next Story