என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையரில் சானியா ஜோடி வெற்றி
Byமாலை மலர்26 Jan 2017 5:06 AM GMT (Updated: 26 Jan 2017 5:07 AM GMT)
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையரில் சானியா ஜோடி அரை இறுதியை எட்டியது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
மெல்போர்ன் :
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர் கால் இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா- குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடி, இந்தியாவின் ரோகன் போபண்ணா- கனடாவின் கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி இணையுடன் மல்லுகட்டியது.
இதில் இரு ஜோடிகளும் தலா ஒரு செட்டை வசப்படுத்திய நிலையில், சூப்பர் டைபிரேக்கரில் நீயா-நானா என்று அனல் பறந்தது. ஒரு கட்டத்தில் 10-10 என்று சமநிலை நீடித்தது. அதன் பிறகு போபண்ணா ஜோடி பந்தை வெளியே அடித்து விட்டு அடுத்தடுத்து தவறுகள் செய்ய, வெற்றிக்கனி சானியா ஜோடியின் மடியில் விழுந்தது.
67 நிமிடங்கள் நடந்த திரிலிங்கான இந்த ஆட்டத்தில் சானியா-டோடிக் கூட்டணி 6-4, 3-6 (12-10) என்ற செட் கணக்கில் போபண்ணா இணையை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. சானியா ஜோடி அடுத்து லியாண்டர் பெயஸ் (இந்தியா)- மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) அல்லது சமந்தா ஸ்டோசுர்- சாம் குரோத் (ஆஸ்திரேலியா) ஆகிய இணைகளில் ஒன்றை சந்திக்கும்.
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர் கால் இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா- குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடி, இந்தியாவின் ரோகன் போபண்ணா- கனடாவின் கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி இணையுடன் மல்லுகட்டியது.
இதில் இரு ஜோடிகளும் தலா ஒரு செட்டை வசப்படுத்திய நிலையில், சூப்பர் டைபிரேக்கரில் நீயா-நானா என்று அனல் பறந்தது. ஒரு கட்டத்தில் 10-10 என்று சமநிலை நீடித்தது. அதன் பிறகு போபண்ணா ஜோடி பந்தை வெளியே அடித்து விட்டு அடுத்தடுத்து தவறுகள் செய்ய, வெற்றிக்கனி சானியா ஜோடியின் மடியில் விழுந்தது.
67 நிமிடங்கள் நடந்த திரிலிங்கான இந்த ஆட்டத்தில் சானியா-டோடிக் கூட்டணி 6-4, 3-6 (12-10) என்ற செட் கணக்கில் போபண்ணா இணையை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. சானியா ஜோடி அடுத்து லியாண்டர் பெயஸ் (இந்தியா)- மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) அல்லது சமந்தா ஸ்டோசுர்- சாம் குரோத் (ஆஸ்திரேலியா) ஆகிய இணைகளில் ஒன்றை சந்திக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X