search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாவட்ட கூடைப்பந்து போட்டி: திண்டுக்கல் அணிகள் சாம்பியன்
    X

    மாவட்ட கூடைப்பந்து போட்டி: திண்டுக்கல் அணிகள் சாம்பியன்

    திண்டுக்கல் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில், மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் திண்டுக்கல் அணிகள் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.
    திண்டுக்கல் :

    திண்டுக்கல் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில், மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் அட்யுதா பள்ளி உள்விளையாட்டு அரங்கில் நடந்தன. ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 4 அணிகளும் பங்கேற்றன. போட்டிகள் அனைத்தும் லீக் சுற்றுகளின்படி நடந்தது. நேற்று இறுதிச்சுற்று போட்டிகள் நடந்தன. இதில் ஆண்கள் பிரிவில் திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி அணி, ஏ.சி.எல்.சி. கிளப் அணியுடன் மோதியது. இதில் ஜி.டி.என். கல்லூரி அணி 76-70 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

    பெண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் திண்டுக்கல் விளையாட்டு விடுதி அணி, பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி அணிகள் மோதின. இதில் விளையாட்டு விடுதி அணி 46-40 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

    ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த ஜி.டி.என். கல்லூரி அணிக்கு பரிசுக்கோப்பையுடன், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும், பெண்கள் பிரிவில் வென்ற விளையாட்டு விடுதி அணிக்கு பரிசுகோப்பையுடன் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. பரிசுகளை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் அன்சாரி, துணைத்தலைவர் தர்மலிங்கம், இணைச்செயலாளர் ரவி, மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் ஆகியோர் வழங்கினர்.
    Next Story
    ×