என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விகாஸ் கிரிஷனுக்கு சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் சிறந்த ‘குத்துச் சண்டை வீரர்’ விருது
Byமாலை மலர்28 Nov 2016 11:50 AM GMT (Updated: 28 Nov 2016 11:50 AM GMT)
சர்வதேச குத்துச் சண்டை சங்கம் இந்தியாவின் குத்துச் சண்டை வீரரான விகாஸ் கிரிஷனுக்கு ‘சிறந்த குத்துச் சண்டை வீரர்’ விருதை வழங்க இருக்கிறது.
இந்தியாவின் பிரபல குத்துச் சண்டை வீரர் விகாஸ் கிரிஷன். 24 வயதாகும் ஆசிய போட்டியில் தங்க பதக்கம் வென்றனர். இந்த வருடம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக சர்வதேச குத்துச் சண்டை சங்கம் அவருக்கு சிறந்த குத்துச் சண்டை வீரர் விருதை வழங்க இருக்கிறது.
அடுத்த மாதம் 20-ந்தேதி சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் 70-வது ஆண்டு விழா நடக்கிறது. அப்போது இந்த விருது வழங்கப்பட இருக்கிறது. இதுகுறித்து விகாஸ் கிரிஷனுக்கு இச்சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
2010-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் தங்க பதக்கம் வென்ற விகாஸ், 2014-ம் ஆண்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். இந்த விருதை வாங்கும் முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விகாஸ் கூறுகையில் ‘‘இது மிகப்பெரிய கவுரவம். இருந்தாலும் நான் இந்த விருதால் மகிழ்ச்சி அடையவில்லை. ஏனெனில் நான் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல ஆசைப்பட்டேன். அதை உண்மையிலேயே தவற விட்டுவிட்டேன்’’ என்றார்.
அடுத்த மாதம் 20-ந்தேதி சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் 70-வது ஆண்டு விழா நடக்கிறது. அப்போது இந்த விருது வழங்கப்பட இருக்கிறது. இதுகுறித்து விகாஸ் கிரிஷனுக்கு இச்சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
2010-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் தங்க பதக்கம் வென்ற விகாஸ், 2014-ம் ஆண்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். இந்த விருதை வாங்கும் முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விகாஸ் கூறுகையில் ‘‘இது மிகப்பெரிய கவுரவம். இருந்தாலும் நான் இந்த விருதால் மகிழ்ச்சி அடையவில்லை. ஏனெனில் நான் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல ஆசைப்பட்டேன். அதை உண்மையிலேயே தவற விட்டுவிட்டேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X