search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொகாலியில் பிராட், அன்சாரி விளையாடுவது சந்தேகம்
    X

    மொகாலியில் பிராட், அன்சாரி விளையாடுவது சந்தேகம்

    இந்தியாவிற்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் சபார் அன்சாரி காயம் காரணமாக விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போடடிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    3-வது டெஸ்ட் மொகாலியில் வரும் சனிக்கிழமை (26-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக இரண்டு அணிகளும் மொகாலி சென்றுள்ளன. இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டிற்கு விசாகப்பட்டினத்தில் விளையாடும்போது காயம் ஏற்பட்டது. முதல் நாளில் ஏற்பட்ட காயத்துடன் டெஸ்ட் மூலம் விளையாடினார்.

    தற்போது அவரது காயம் குறித்து இங்கிலாந்து அணி முழுவதுமான தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. இதனால் மொகாலி டெஸ்டில் பிராட் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் சுழற்பந்து வீச்சாளர் சபார் அன்சாரி காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்.



    சனிக்கிழமை போட்டி தொடங்கும் நிலையில், அதற்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை நடைபெறும் பயிற்சியில் கலந்து கொண்டு உடற்தகுதியை நிரூபித்தால் அன்சாரி விளையாட வாய்ப்புள்ளது. இல்லையெனில் அவருக்குப் பதிலாக கேரத் பேட்டி இடம் பெற வாய்ப்புள்ளது.
    Next Story
    ×