என் மலர்
செய்திகள்

காரைக்குடியில் செல்லப்பன் மங்கையர்க்கரசி கோப்பை கிரிக்கெட் போட்டி
காரைக்குடி:
செல்லப்பன் மங்கையர்க்கரசி சுழற்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை (2-ந்தேதி) தொடங்குகிறது.
இதுகுறித்து காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் தாளாளர் சத்யன் கூறியதாவது:-
எனது பெற்றோர்களின் பெயரில் செல்லப்பன் மங்கையர்க்கரசி சுழல் கோப்பை டி-2 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் ஆண்டு போட்டிகள் நாளை (2-ந்தேதி) முதல் 5-ந் தேதி வரை, செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள 25 பள்ளிகள் இப்போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
போட்டியின் முதல் நாள் சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் போட்டிகளை தொடங்கி வைக்கிறார். தேவகோட்டை துணை ஆட்சியர் அல்பி ஜான், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் கல்யாணராமன் முன்னிலை வகிக்கிறார்.
போட்டிகள் நடைபெறும் மைதானம் ஒரு மாநில அளவிலான தகுதி திறன் பெற்றது. அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி மாணவர்கள் போட்டி அலுவலர்களாக செயல்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






