என் மலர்
செய்திகள்

ரகானே, ரோகித் சர்மா அர்ஜூனா விருதை பெற்றுக்கொண்டனர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான ரகானே, ரோகித் சர்மா ஆகியோர் அர்ஜூனா விருதைப் பெற்றுக் கொண்டனர்.
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களாக திகழ்ந்து வருபவர்கள் ரகானே மற்றும் ரோகித் சர்மா. கடந்த 2015-ம் ஆண்டு சிறப்பாக விளையாடியதற்காக ரோகித் சர்மாவிற்கு மத்திய அரசு அர்ஜூனா விருது அறிவித்து பெருமைப்படுத்தியது. அதேபோல் இந்த ஆண்டு ரகானேவிற்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டது.
இருவரும் சர்வதேச போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்ததால் ஜனாதிபதி கையால் விருதை வாங்க முடியாமல் போனது. தற்போது இந்தியா திரும்பிய இவர்கள் இருவருக்கும் இன்று டெல்லியில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயல் அர்ஜூனா விருதுகளை வழங்கினார்.
அர்ஜூனா விருதை வழங்கிய கோயல் ‘‘இந்தியாவின் முன்னணி விளையாட்டாக கிரிக்கெட் விளங்கி வருவதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதேவேளையில் இந்திய அரசு மற்ற விளையாட்டுக்களையும் ஊக்குவிக்க உறுதிபூண்டுள்ளது’’ என்றார்.
இருவரும் சர்வதேச போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்ததால் ஜனாதிபதி கையால் விருதை வாங்க முடியாமல் போனது. தற்போது இந்தியா திரும்பிய இவர்கள் இருவருக்கும் இன்று டெல்லியில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயல் அர்ஜூனா விருதுகளை வழங்கினார்.
அர்ஜூனா விருதை வழங்கிய கோயல் ‘‘இந்தியாவின் முன்னணி விளையாட்டாக கிரிக்கெட் விளங்கி வருவதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதேவேளையில் இந்திய அரசு மற்ற விளையாட்டுக்களையும் ஊக்குவிக்க உறுதிபூண்டுள்ளது’’ என்றார்.
Next Story