search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேல் ரத்னா விருது பெற்ற பி.வி.சிந்துவிற்கு கமாண்டர் பதவி வழங்க சி.ஆர்.பி.எப் முடிவு
    X

    கேல் ரத்னா விருது பெற்ற பி.வி.சிந்துவிற்கு கமாண்டர் பதவி வழங்க சி.ஆர்.பி.எப் முடிவு

    ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு கமாண்டர் மற்றும் விளம்பர தூதர் பதவிகளை வழங்கி கௌரவிக்க மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புப் படை(சி.ஆர்.பி.எப்.) முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு கமாண்டர் மற்றும் விளம்பர தூதர் பதவிகளை வழங்கி கௌரவிக்க மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புப் படை(சி.ஆர்.பி.எப்.) முடிவு செய்துள்ளது.

    ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு கேல் ரத்னா விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கி பாராட்டினார். விருதுடன் தலா ரூ.7½ லட்சமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் வழக்கமான நடைமுறைகளின் படி கமாண்டர் பதவியை வழங்குமாறு சி.ஆர்.பி.எப் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது. உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு கிடைத்த பின் அதிகார பூர்வமாக பி.வி.சிந்துவுக்கு கமாண்டர் பதவி வழங்கபடும்.

    சி.ஆர்.பி.எப்.கமாண்டர் பதவி என்பது போலீஸ் துறையில் எஸ்.பி பதவிக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×