search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரியோவில் இருந்து திரும்பிய இந்திய வீராங்கனை சுதா சிங்கிற்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை
    X

    ரியோவில் இருந்து திரும்பிய இந்திய வீராங்கனை சுதா சிங்கிற்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை

    ரியோவில் இருந்து திரும்பிய இந்திய வீராங்கனை சுதாசிங்கிற்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்று மாதிரி பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
    பெங்களுர்:

    இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனைகளில் ஒருவர் சுதாசிங். பிரேசிலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இவர் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பந்தயத்தில் பங்கேற்றார். 2-வது தகுதி சுற்றில் கலந்து கொண்ட அவர் 9-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.

    உத்தர பிரதேசத்தை சேர்ந்த சுதாசிங் பிரேசிலில் இருந்த போதே, அவருக்கு லேசான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இந்தியா திரும்பியதும் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. காய்ச்சல், உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட அவர் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தென்அமெரிக்க நாடுகளை அச்சுறுத்திய ஜிகா வைரஸ் குறிப்பாக பிரேசிலை ஆட்டிப்படைத்தது. ரியோவில் கலந்து கொண்ட வீரர்களுக்கு இதுகுறித்து அச்சம் இருந்தது. இந்த வைரஸ் சுதா சிங்கையும் தாக்கி இருக்குமோ? என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால் அவரது ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டது.

    சோதனையின் முடிவில் அவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற தெரிய வந்துள்ளது. ஆனால், H1N1 வைரஸ் நோயான பன்றிக் காய்ச்சல் தாக்கியுள்ளதாக ரத்த மாதிரியில் தெரியவந்துள்ளது.

    ஜிகா வைரஸ் பயத்தால் சுதாசிங்கை தனி வார்டில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
    Next Story
    ×