என் மலர்
செய்திகள்

மாரத்தான் வீராங்கனை புகார்: விசாரணை நடத்த இரு நபர் குழுவை அமைத்தார் விளையாட்டு மந்திரி
ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட இந்திய மாரத்தான் வீராங்கனை ஓ.பி. ஜெய்ஷாவின் புகார் குறித்து விசாரணை நடத்த இரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் ஓ.பி. ஜெய்ஷா மாரத்தானில் போட்டியில் கலந்து கொண்டார். 157 வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த ஓட்டத்தில் ஜெய்ஷா 89-வது இடம் பிடித்தார். 42 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த மாரத்தான் போட்டி முடிந்தபோது ஜெய்ஷா மிகவும் சோர்வாக காணப்பட்டார்.
ரியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டது. இந்தியா திரும்பிய ஜெய்ஷா இந்திய அதிகாரிகள் தன்மீது அக்கறை காட்டவில்லை என்பதை வெளிப்படுத்தினார்.
இதுதொடர்பாக அவர் செய்தி சேனல்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது “வெயில் அதிகமாக அடிக்கும்போது மாரத்தான் வீராங்கனைகளுக்கு அதிகமான தண்ணீர் தேவைப்படும். பொதுவாக முதல் 8 கிலோ மீட்டரை தாண்டிய பின்னர் தண்ணீர் வழங்கப்படும். பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தண்ணீர் தேவைப்படும்.
போட்டியில் கலந்து கொண்ட பிற வீராங்கனைகளுக்கு அவர்களது நாட்டு அதிகாரிகள் ஒவ்வொரு 2.5 கிலோ மீட்டர் தொலைவில் மேஜை அமைத்து அவர்களுக்கு திரவ உணவுகளை வழங்கினர். மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட பிற வீராங்கனைகளுக்கு வழியில் உணவு கூட வழங்கப்பட்டது. ஆனால் எனக்கு எதுவும் வழங்கப்படவில்லை. அதிகாரப்பூர்வ ஒலிம்பிக்ஸ் கவுண்டர்கள் 8 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. அதனைத்தான் நான் நம்பியிருந்தேன்.
போட்டி முடிவடைந்ததும் என்னுடைய உடலில் பல்ஸ் இல்லை என்பதை உணர முடிந்தது. இது என்னுடைய இரண்டாவது வாழ்க்கை போன்றது’’ என்று ஜெய்ஷா கூறி உள்ளார்.
ஒரு வீராங்கனையின் இந்த புகார் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து இந்திய தடகள பெடரேஷன் கூறுகையில் ‘‘போட்டி நடைபெற்ற நாளிற்கு முந்தைய நாள் போட்டிக்கான தயார் நிலை குறித்து கேட்டபோது, எதுவும் வேண்டாம் என்று வீராங்கனை கூறினார்’’ என்று கூறியிருந்தது.
இந்நிலையில் வீராங்கனையின் புகார் குறித்து விசாரணை நடத்த மத்திய விளையாட்டுத்துறை மந்திரி இருநபர் கொண்ட விசாரணைக் கமிட்டியை அமைத்துள்ளார்.
இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘மத்திய இணை மந்திரியும், இளைஞர்கள் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரியுமான விஜய் கோயல், இப்புகார் குறித்து விசாரணை நடத்த விளையாட்டுத்துறை இணை செயலாளர் ஓங்கர் கேதியா, விளையாட்டுத்துறை இயக்குனர் விவேக் நாராயண் ஆகியோரை கொண்ட இருநபர் கமிட்டியை அமைத்துள்ளார்’’ என்று கூறியுள்ளது.
இந்த கமிட்டி விசாரணை நடத்தி இன்னும் 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் ஓ.பி. ஜெய்ஷா மாரத்தானில் போட்டியில் கலந்து கொண்டார். 157 வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த ஓட்டத்தில் ஜெய்ஷா 89-வது இடம் பிடித்தார். 42 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த மாரத்தான் போட்டி முடிந்தபோது ஜெய்ஷா மிகவும் சோர்வாக காணப்பட்டார்.
ரியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டது. இந்தியா திரும்பிய ஜெய்ஷா இந்திய அதிகாரிகள் தன்மீது அக்கறை காட்டவில்லை என்பதை வெளிப்படுத்தினார்.
இதுதொடர்பாக அவர் செய்தி சேனல்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது “வெயில் அதிகமாக அடிக்கும்போது மாரத்தான் வீராங்கனைகளுக்கு அதிகமான தண்ணீர் தேவைப்படும். பொதுவாக முதல் 8 கிலோ மீட்டரை தாண்டிய பின்னர் தண்ணீர் வழங்கப்படும். பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தண்ணீர் தேவைப்படும்.
போட்டியில் கலந்து கொண்ட பிற வீராங்கனைகளுக்கு அவர்களது நாட்டு அதிகாரிகள் ஒவ்வொரு 2.5 கிலோ மீட்டர் தொலைவில் மேஜை அமைத்து அவர்களுக்கு திரவ உணவுகளை வழங்கினர். மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட பிற வீராங்கனைகளுக்கு வழியில் உணவு கூட வழங்கப்பட்டது. ஆனால் எனக்கு எதுவும் வழங்கப்படவில்லை. அதிகாரப்பூர்வ ஒலிம்பிக்ஸ் கவுண்டர்கள் 8 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. அதனைத்தான் நான் நம்பியிருந்தேன்.
போட்டி முடிவடைந்ததும் என்னுடைய உடலில் பல்ஸ் இல்லை என்பதை உணர முடிந்தது. இது என்னுடைய இரண்டாவது வாழ்க்கை போன்றது’’ என்று ஜெய்ஷா கூறி உள்ளார்.
ஒரு வீராங்கனையின் இந்த புகார் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து இந்திய தடகள பெடரேஷன் கூறுகையில் ‘‘போட்டி நடைபெற்ற நாளிற்கு முந்தைய நாள் போட்டிக்கான தயார் நிலை குறித்து கேட்டபோது, எதுவும் வேண்டாம் என்று வீராங்கனை கூறினார்’’ என்று கூறியிருந்தது.
இந்நிலையில் வீராங்கனையின் புகார் குறித்து விசாரணை நடத்த மத்திய விளையாட்டுத்துறை மந்திரி இருநபர் கொண்ட விசாரணைக் கமிட்டியை அமைத்துள்ளார்.
இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘மத்திய இணை மந்திரியும், இளைஞர்கள் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரியுமான விஜய் கோயல், இப்புகார் குறித்து விசாரணை நடத்த விளையாட்டுத்துறை இணை செயலாளர் ஓங்கர் கேதியா, விளையாட்டுத்துறை இயக்குனர் விவேக் நாராயண் ஆகியோரை கொண்ட இருநபர் கமிட்டியை அமைத்துள்ளார்’’ என்று கூறியுள்ளது.
இந்த கமிட்டி விசாரணை நடத்தி இன்னும் 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்.
Next Story






