search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரியோ ஒலிம்பிக்: 4x400 மீ அரையிறுதியில் வெற்றி பெற்றும் தகுதி இழந்த பிரிட்டன் அணி
    X

    ரியோ ஒலிம்பிக்: 4x400 மீ அரையிறுதியில் வெற்றி பெற்றும் தகுதி இழந்த பிரிட்டன் அணி

    ரியோ ஒலிம்பிக்கில் 4x400 மீ ஆண்களுக்கான தொடர் ஒட்டத்தின் அரையிறுதி ஒன்றில் 3-வது இடம் பிடித்தும் பிரிட்டன்அணி தகுதி வாய்பை இழந்தது.
    ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 4x400 மீ தொடர் ஓட்டத்தின் 2-வது அரையிறுதி நடைபெற்றது. இதில் பிரிட்டன் அணி சார்பில் நிகெல் லெவின், டெலானோ வில்லியம்ஸ், மேத்யூ ஹட்சன்-ஸ்மித் மற்றும் மார்ட்டின் ரூனே பந்தய தூரத்தை 2 நிமிடம் 58.88 வினாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்தனர்.

    ஆனால், பிரிட்டன் அணியை தடகள கூட்டமைப்புகளின் சர்வதேச சங்கம் (IAAF) தகுதி நீக்கம் செய்தது. பிரிட்டன் அணியினர் தங்கள் கையில் உள்ள பேட்டனை குறிப்பிட்ட எல்லைக்குள் பரிமாறிக் கொள்ள தவறியதால் இந்த தகுதி நீக்கம் என்று கூறப்படுகிறது.

    இதை எதிர்த்து பிரிட்டன் அணி மேல்முறையீடு செய்தது. ஆனால், IAAF அதை நிராகரித்து விட்டது. முதல் மற்றும் இரண்டாவது அரையிறுதியைச் சேர்த்து ஒட்டுமொத்தமாக 3-வது இடம் பிடித்தும் பிரிட்டன் அணி ஏமாற்றம் அடைந்துள்ளது.

    பிரிட்டன் அணி வெளியேறியதால் ஒட்டுமொத்தமாக 8-வது இடம் பிடித்த பிரேசில் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    இதே பிடிவில் ஓடிய இந்திய அணியும் (மொகமது கஞ்சு, மொகமது அனாஸ், அய்யாசாமி தருண், ராஜீவ் ஆரோக்கியா) தகுதி இழந்தது. 3 நிமிடம் 2.24 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தபோதும், தருண் மற்றும் ராஜீவ் ஆகியோருக்கு இடையே பேட்டன் பரிமாற்றத்தில் தவறு நடந்தால் தகுதி நீக்கம் செய்யப்ட்டது.

    ட்ரினிடாட் அண்டு டொபாக்கோ அணியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்தமுள்ள 16 அணிகளில் 3 அணிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×