என் மலர்
செய்திகள்

தீபா கர்மாகருக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு: திரிபுராவில் நாளை மறுநாள் பாராட்டு விழா
ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு டெல்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அகர்தலா:
திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் வால்ட் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார். மேலும் சவாலான புரோடுனோவா சாகசத்தை நிகழ்த்தும் உலகின் முன்னணி ஜிம்னாஸ்டிக் வீரர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். அவரது சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட அவர் 4-வது இடத்தைப் பிடித்தார்.
இந்நிலையில் பிரேசிலில் இருந்து விமானம் மூலம் இன்று டெல்லி திரும்பினார். இந்திரா காந்தி விமான நிலையத்தில் அவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய தீபா கர்மாகர், ‘நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாட்டிற்காக பதக்கம் வென்றிருந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஏழாவது அல்லது எட்டாவது இடத்தையே பிடிக்க முடியும் என நினைத்தேன். ஆனால் நான்காவது இடத்திற்கு வருவேன் என எதிர்பார்க்கவில்லை.” என்றார்.
இதற்கிடையே, தீபா கர்மாகரின் சாதனையை கவுரவிக்கும் வகையில் நாளை மறுநாள் (22-ம் தேதி) திரிபுரா அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெறுகிறது. அகர்தலாவில் உள்ள விவேகானந்தர் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த பாராட்டு விழாவில் முதல்வர் மாணிக் சர்க்கார், விளையாட்டுத்துறை அமைச்சர் சாகித் சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டு தீபா கர்மாகர் மற்றும் அவரது பயிற்சியாளர் பிஸ்வேஷ்வர் நந்தி ஆகியோரை பாராட்டி உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் வால்ட் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார். மேலும் சவாலான புரோடுனோவா சாகசத்தை நிகழ்த்தும் உலகின் முன்னணி ஜிம்னாஸ்டிக் வீரர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். அவரது சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட அவர் 4-வது இடத்தைப் பிடித்தார்.
இந்நிலையில் பிரேசிலில் இருந்து விமானம் மூலம் இன்று டெல்லி திரும்பினார். இந்திரா காந்தி விமான நிலையத்தில் அவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய தீபா கர்மாகர், ‘நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாட்டிற்காக பதக்கம் வென்றிருந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஏழாவது அல்லது எட்டாவது இடத்தையே பிடிக்க முடியும் என நினைத்தேன். ஆனால் நான்காவது இடத்திற்கு வருவேன் என எதிர்பார்க்கவில்லை.” என்றார்.
இதற்கிடையே, தீபா கர்மாகரின் சாதனையை கவுரவிக்கும் வகையில் நாளை மறுநாள் (22-ம் தேதி) திரிபுரா அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெறுகிறது. அகர்தலாவில் உள்ள விவேகானந்தர் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த பாராட்டு விழாவில் முதல்வர் மாணிக் சர்க்கார், விளையாட்டுத்துறை அமைச்சர் சாகித் சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டு தீபா கர்மாகர் மற்றும் அவரது பயிற்சியாளர் பிஸ்வேஷ்வர் நந்தி ஆகியோரை பாராட்டி உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






