search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 4-வது டெஸ்ட்: 2-ம் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் கைவிடப்பட்டது
    X

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 4-வது டெஸ்ட்: 2-ம் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் கைவிடப்பட்டது

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் முழுவதும் மழை பாதிப்பால் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ட்ரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயின், குயின்பார்க்கில் ஓவல் மைதானத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார். மழையால் இந்த ஆட்டம் பெரிது பாதிக்கப்பட்டது.

    22 ஓவர்கள் மட்டுமே முதல் நாளில் வீசப்பட்டது. வெஸ்ட்இண்டீஸ் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன் எடுத்து இருந்தது. பிராத்வெயிட் 32 ரன்னிலும், சாமுவேல்ஸ் 4 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். ஜான்சன் 9 ரன்னில் இஷாந்த்சர்மா பந்திலும், பிராவோ 10 ரன்னில் அஸ்வின் பந்திலும் ஆட்டம் இழந்தனர்.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது. தொடக்கம் முதலே மழை பெய்து கொண்டிருந்தது. தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்ததால் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுவதுமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    2 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் 22 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டுள்ளது. இதனால் போட்டி டிரா ஆவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.

    Next Story
    ×